* சாயி
உம்மை கண்ணாரக் கண்டாலே
பெருகிடும் விழி வெள்ளமே!
* சாயி
உம்மை மனதார நினைத்தாலே
குளிர்ந்திடும் எங்கள் உள்ளமே!
* சாயி
உந்தன் நாமத்தை ஜெபித்தாலே
தெளிந்திடும் எங்கள் மனமே!
* சாயி
உந்தன் பாதம் தொட்டாலே
தீர்ந்திடும் எங்கள் பாவமே!
* சாயி
உந்தன் கதைகளைப் படித்தாலே
பெருகிடும் எங்கள் புண்ணியமே!
* சாயி
உந்தன் லீலைகளைக் கேட்டாலே
விலகிடும் எங்கள் பயமே!
* சாயி
உந்தன் உதியினை உண்டாலே
மறைந்திடும் எங்கள் பிணியே!
* சாயி
உந்தன் வழியினில் சென்றாலே
அடைந்திடுவோம் பிரம்ம ஞானமே!
* சாயி
உம்மை அனைத்திலும் உண்ர்ந்தாலே
ஒன்றிடுவோம் உம்முடனே!!
Sainath Maharajah ki jai
ReplyDelete