வரம் தருவாய் வரம் தருவாய்
மனமிரங்கி வந்தருள்வாய்....பாபா
வரம் தருவாய் வரம் தருவாய்
மனமிரங்கி வந்தருள்வாய்....
கருணாகரனே கருணையின் வடிவே
கனவில் வந்து வரம் தருவாய்....சாயி
கருணாகரனே கருணையின் வடிவே
கனவில் வந்து வரம் தருவாய்
வரம் தருவாய் வரம் தருவாய்
மனமிரங்கி வந்தருள்வாய்
பாண்டுரங்கா பண்டரிநாதா
உன்பாதம் பற்றிட வரம் தருவாய்....பாபா
பாண்டுரங்கா பண்டரிநாதா
உன்பாதம் பற்றிட வரம் தருவாய்
வரம் தருவாய் வரம் தருவாய்
மனமிரங்கி வந்தருள்வாய்
மக்களின் வினைகளை மண்ணாக்கி
உந்நாமம் பாடிட வரம் தருவாய் ....பாபா
மக்களின் வினைகளை மண்ணாக்கி
உந்நாமம் பாடிட வரம் தருவாய்
வரம் தருவாய் வரம் தருவாய்
மனமிரங்கி வந்தருள்வாய்
துனியின் உதியை மருந்தாக்கி
துயரங்கள் தீர்த்து அருள் புரிவாய்....சாயி
துனியின் உதியை மருந்தாக்கி
துயரங்கள் தீர்த்து அருள் புரிவாய்
வரம் தருவாய் வரம் தருவாய்
மனமிரங்கி வந்தருள்வாய்
ஈசனின் உருவே ஈகையின் கடவுளே
உன் லீலைகள் பாடிட வரம் தருவாய்....பாபா
ஈசனின் உருவே ஈகையின் கடவுளே
உன் லீலைகள் பாடிட வரம் தருவாய்
வரம் தருவாய் வரம் தருவாய்
மனமிரங்கி வந்தருள்வாய்
பிரம்மத்தின் உருவே பிரபஞ்சத்தின் கடவுளே
உனை பற்றி வந்திட வரம் தருவாய்....சாயி
பிரம்மத்தின் உருவே பிரபஞ்சத்தின் கடவுளே
உனை பற்றி வந்திட வரம் தருவாய்
வரம் தருவாய் வரம் தருவாய்
மனமிரங்கி வந்தருள்வாய்
செய்த பாவங்களை உதியாக்கி
விமோசனம் தந்து வரம் தருவாய்....பாபா
செய்த பாவங்களை உதியாக்கி
விமோசனம் தந்து வரம் தருவாய்
வரம் தருவாய் வரம் தருவாய்
மனமிரங்கி வந்தருள்வாய்.....சாயி
வரம் தருவாய் வரம் தருவாய்
மனமிரங்கி வந்தருள்வாய்
No comments:
Post a Comment